உயர்ந்த மரம் அடியோடு -சாய
குஞ்சுக் காகம் தொடர்ந்து -கரைய
தோகை மயில் அழகாய்- ஆட
ஆனால் இந்த ரோஜா மலரே
எப்போது பூப் பூத்தது ?
ரோஜாக்குள் அந்த முள் - அந்த
முள்ளுக்குள் - நீ
உனக்குள் நான்
எதற்குள் நாம் ?
இனியவள்
Posted at: 03:32 PM | 0 Comments | Add Comment | Permalink
வேண்டுமா? இது வேண்டுமா???
வேண்டும்,
வேண்டும் இவன் இதயம் வேண்டும்
அவன் அதை கொடுக்க மறுத்தான்.
கொடுக்க மறுத்ததை
எடுக்க நினைத்து,
அவன் இல்லத்தின் வாசலில்,
நடத்தினேன் என் காதல் உண்ணாவிரத்தை .
இனியவள்
Posted at: 03:19 PM | 0 Comments | Add Comment | Permalink